சகிப்புத்தன்மை இல்லாத உயிரினங்களே
இல்லை எனலாம். சகிப்புத்தன்மை அனைவரிடமும்
உள்ளது ஆனால், அதன் அளவிலும் தன்மையிலும் தான் வேறுபாடு உள்ளது. அதற்கு கால சூழல் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அதுமட்டுமின்றி தங்கள் எண்ணங்களை எல்லோரும் ஏற்றுகொள்ளவேண்டும்
என்ற மனப்பான்மையும் சகிப்புத்தன்மைக்கு தடையாக உள்ளது. அதேவேளையில் சகிப்புத்தன்மைக்கு ஒரு எல்லையும் உள்ளது. மொத்தத்தில் ஒருவரது எண்ணங்களை, செயல்களை, பழக்க
வழக்கங்களை எக்காரணங்கொண்டும் மாற்றிக் கொள்ள வேண்டும் என நாம் கூறக்கூடாது. நாம் எவ்வாறு உணர்ச்சிக்கு சிக்கிக் கொள்கிறோமோ
அதேபோல் தான் மற்றவர்களும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரையும் தன் நிலையில் வைத்தும், அவர்களது
கண்ணோட்டத்தில் வைத்தும் சிந்தித்து செயலாற்ற வேண்டும்.
தவறான புரிதலே பெரும்பாலான பிரச்சனைகளின்
தோற்றுவாய்.
எல்லோரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு
செயல்பட்டால், இவ்வுலகில் எப்பிரச்சனைகளும் எழாது. ஆனால், இது நடைமுறை சாத்தியமற்றது என நீங்கள் வினவுவது
புரிகிறது. இருந்தாலும் இதை நாம் பின்பற்றி
சோதித்து பார்ப்போமே. சகிப்புத்தன்மையிலிருந்து
விடுபட்டு நாம் செயல்படும்பொழுது நம் ஆற்றல்கள் தான் வீணடிக்கப்படுகின்றன. இன்றைக்கு எல்லோருக்கும் எத்தனையோ பொருப்புகள்,
கடமைகள், கனவுகள் உள்ளது அதை நாம் விட்டுவிட்டு நடுவில் கிளம்பும் பிரச்சனைகளின் பயனித்தால்
நாம் எவ்வாறு நம் இலக்கினை அடைய முடியும்.
இவ்வுலகில் எல்லா உயிர்களும்
சகிப்புத்தன்மையுடன் வாழ்வதால் தான் இன்று
இத்தனை உயிரினங்கள் பரிணாம வளர்ச்சியால் பல்கிப் பெருகி இருக்கின்றன. மாறாக அவ்வுயிரினங்கள் செயல்பட்டிருந்தால் இன்று
மனித இனமே இந்த மாபெரும் வளர்ச்சியினை எட்டியிருக்காது.
நீங்கள் உங்களுக்கு எதிராக செயலாற்றுபவரை
சகித்துகொண்டு சிறிது காலம் செயலாற்றிபாருங்கள், அவர் உங்களுக்கு கொடுக்கும் தொந்தரவுகள்
சிறிது சிறிதாக குறைத்து விடுவார்.
நாம் உணர்ச்சிவயப்பட்டு செய்த
செயல்களை சில ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் அல்லது நீங்கள் கடந்த காலத்தில் சில ஆண்டுகளுக்கு
முன் செய்தவற்றை நினைத்து பார்த்தீர்களேயானால், உங்களுக்கு தர்மசங்கடமாக இருக்கும். தவறு யார்பக்கமோ இருக்கட்டும் அதற்கு முறைப்படி
என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வது போதுமானது.
அப்படி செய்தும் நடவடிக்கை இல்லை என்றால்
அதற்கு அடுத்த வழிமுறையை கையாள்வது தான் சரியாக அமையும். இவ்வாறு நடந்துகொண்டால் நாம் யாருக்கும் பயப்படவேண்டிய
அவசியமும் இருக்காது. நம் செயல்களிலும் இலக்குகளை
அடைவதிலும் எந்த சுனக்கமும் இருக்காது.
No comments:
Post a Comment